Thursday, May 9, 2013

புறம் என்றால் என்ன?


بسم الله الرحمن الرحيم
ويل لكل همزة لمزة *
اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه اجمعين
அபூ உபைதா (ரளி) : همزة لمزة புறங்கூறுபவன், கெட்ட வார்த்தை கூறுபவன்.
அபுல் ஆலியா, ஹஸன், முஜாஹித், அத்தா இப்னு அபீரபாஹ் (ரஹ்): همزة لمزة நேரில் திட்டுபவனுக்கு, ஆள் இல்லாதபோது திட்டுபவனுக்கு
அபூ கதாதா ரளி) : همزة لمزة  தாய், தந்தை, குலத்தை திட்டுபவனுக்கும், சைகை செய்து குறைகூறுபவனுக்கு
இமாம் இப்னு கதீர் ரஹ் : همزة لمزة நாவால் குறைகூறுபவன், சைகையால் குறைகூறுபவன்.
இவர்களில் வலீப்னு முஙைரா, அக்னஸுப்னு ஷூரைக், உமய்யதுப்னு கலப் முக்கியமானவர்கள்.        
குற்றங்கள் இரு வகைப்படும்.
1) அல்லாஹ் சம்பந்தப்பட்டவை 2) அடியார் சம்பந்தப்பட்டவை
அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம்.
சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம்.
மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது.
எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்  
                        .
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்என்றுநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(நூல்-புகாரி)
யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
வெற்றிக்கான வழியை கேட்ட உக்பத்து இபுனு ஆமிர் ரளி அவர்களுக்கு ஸல் அவர்கள்: உனது நாவை மூடு, வீட்டில் இருந்து உனது பாவங்களை நினைத்து அழு! என்றனர். (திர்மிதி)
முஃமினானவர் குத்தல் பேச மாட்டார், சபிக்க மாட்டார், பிறரை ஏச மாட்டார், மானக்கேடானவற்றை செய்ய மாட்டார் என்று ஸல் கூறினார்கள்.

நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18)
همزة لمزة புறம்பேசுதல்என்றால்என்ன?
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْموَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًاأَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوه وَاتَّقُوا اللَّـهَُ إِنَّ اللَّـهَ تَوَّابٌ رَّحِيمٌ

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி),நூல்:முஸ்லிம்)

ஏன் புறம் பேசுகிறார்கள் என்பதற்கு உளவியல் ரீதியாகப் பல காரணங்களை அடுக்கும் உளவியல் நிபுணர்கள், இது ஒரு வகையான மன வக்கிரத்தின் வெளிப்பாடு என்றே கருத்துத் தெரிவிக்கிறார்கள். தன்னைவிட மகிழ்ச்சியாக இருப்பவர்களைச் சகித்துக் கொள்ள இயாலாமைதான், புறமும் அவதூறும் பேசித் தனக்குத் தானே திருப்தி பட்டுக்கொள்ள வைக்கிறதாம்.

அநேக சமயங்களில் புறம் பேசுபவருக்குப் புறம் பேசப்படுபவரின் நன்மைகளான சமூக மரியாதை, மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல வாழ்க்கைத் துணை, உயர்குணம், இறை அருள், உயரம், வெளுத்த தோல், தோற்றம், செருப்புஇன்னும் என்ன வேண்டுமானலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. இவற்றின்   மீதுள்ள  பொறாமை, விரோதம், குரோதம், ஆற்றாமை முதலியவற்றின் வெளிப்பாடே வாய் நாற்றமாக (உண்மைதான்!!. ஆங்கிலத்தில் இதற்கு Bad Mouthing என்ற ஒரு பெயரும் உண்டு) வெளியாகிறது. 
ஒருவரிடம் உள்ள குறைகளை அவர்களின் முகத்துக்கு நேரே சொல்லும் துணிவும், திராணியும் அற்றவர்கள்தான் புறம் சொல்லுவதைச் செய்கிறார்கள். இப்படிப் புறம் பேசுவதால் என்ன பயன் விளையும்? இதை நாம் யோசிக்க வேண்டும்.
நாம் பழகும் ஒருவரிடம் ஒரு குறையிருப்பின் அதை வெளியே சென்று டமாரம் அடிப்பதில் என்ன நியாயமிருக்கிறது? நம்மிடம் உண்மையான நட்போ, அன்போ இருந்தால் அவரது குறைகளை அவரிடமே பக்குவமாக எடுத்துச் சொல்ல முடியும். அதனால் ஒருவேளை நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் நிகழலாம்.
தன்னால்  எப்பொழுதும் செய்ய இயலாத கோழைத் தனமும் புறம் பேசுதலாக வெளிப்படும். தன் இயலாமையை மறைக்க, உருப்படியாக ஏதாவது செய்தவனைப் பற்றிக் கொஞ்சம் புறம் பேசினால் போயிற்று. மனம் சமநிலை அடைந்துவிடும். அடுத்த இயலாமையைச் சந்திக்கும்வரைத் தாக்குப்பிடிக்கலாம்.
ஒருவிரல் நீட்டி எதிரியைக் காட்டி குறை சொல்லும் வேளையிலே, மறுவிரல் நான்கும் மார்பினை நோக்கி வருவதை அறியாயோ,’ மற்றவர்களைப் பற்றி குறைபேசுவது ஒருவரின் ‘ego’வின் ஏற்றத்தை குறிக்கின்றது. அது சற்று நேரம் மனதுக்கு நிறைவைத் தரும். ஆனால், அந்த நிறைவு தற்காலிகமானது. நிறந்தர மனநிறைவு மற்றவர்களின் நன்மைக்காக பாடுபடுவதிலும், மற்றவர்களை சிறப்புப்படுத்துவதிலுமே இருக்கின்றது.

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும்.
 
قال ا لنبي صلى الله عليه وسلم: الغيبة اشد من الزنا، قالوا يارسول الله، كيف الغيبة اشد من الزنا؟ قال ان الرجل ليزنى فيتوب الله عليه وان صاحب الغيبة لايغفر له حتى يغفرها صاحبه (مشكوة)
عن وائلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تظهر الشتامة لأخيك فيرحمه الله ويبتليك . رواه الترمذى
 உன் சகோதரனை, அவனது குறையைக் குறித்து நீ குறை கூறாதே, அப்படிக் கூறினால் அல்லாஹுதஆலா அவன் மீது கிருபை செய்வான். உன்னை அந்தக் குறையில் சிக்க வைத்து விடுவான்' என்று ஸல் கூறினார்கள். (திர்மிதி)

ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

 
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

ஒரு அடியான் பிற மனிதரின் குறையை இவ்வுலகில் மறைத்தால் அல்லாஹ் மறுமையில் இவனது குறைகளை மறைத்து மன்னித்துவிடுவான்.


உமர் (ரளி) அவர்களும் இப்னு மஸ்வூத் (ரளி) அவர்களும் இரண்டு பேரும் நகர் வலம்...
ஒருவர் வீட்டில் மது குடித்துக் கொண்டு இருந்தார். உமர் (ரளி) அதட்டினார்கள், அவர் அமீருல் முஃமினீனே! நான் மது அருந்தியது என்னவோ உண்மைதான். ஆனால் நீங்கள் பிறர் குறையை தேடலாமா?
உமர் ரளி உண்மை சொன்னீர்; என்று புறப்பட்டு விட்டனர்.

உமர் ரளியும் அபூபக்கர் ரளியும் ஒரு பிரயாணத்தில் தனக்கு பணிவிடை செய்ய ஒரு நபரை வைத்திருந்தனர்.ஒரு தடவை தூங்கி எழுந்து பார்க்கின்றனர். ஒன்றும் சமைக்கவில்லை. இருவரும் இவர் தூங்கு மூஞ்சி என்று சொல்லி விட்டு. நபி ஸல் அவர்களிடம் சென்று நாங்கள் ஸலாம் சொல்வதாக சொல்லி ஸால்னா வாங்கி வாருங்கள் என்றனர்.அவரும் அவ்வாறே செய்ய ஸல் சொன்னார்கள் அவர்கள் குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டனர் என்று சொல்லுங்கள் என்று சொல்ல, இருவரும் உடன் ஸல் அவர்களை சந்திக்க, உங்கள் சகோதரரின் இறைச்சியை சாப்பிட்டு விட்டீர்கள் என்றனர். எங்களுக்காக மன்னிப்பு தேடுங்கள் என்றனர். யாரைப்பற்றி புறம் பேசினீரோ அவரிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள். (ஹயாதுஸ் ஸஹாபா)

உமர் ரளியும் இப்னு மஸ்வூதும் நகர் வலம்.. அப்போது ஓர் வீட்டில் ஒரு வயோதிகர் கையில் புட்டியும் பக்கத்தில் மாது ஆடிக்கொண்டு இருந்தார். உமர் ரளி அருகில் செல்லும்வரை அவருக்கு தெரியவில்லை. பக்கத்தில் போய், போகும் நிலையில் உள்ள உங்களுக்கு இதுதேவையாக? இன்று இரவைப்போன்று நான் என்றும் பார்க்கவில்லை என்றனர்.வயோதிகரும் உண்மைதான் இன்று நீங்கள் எவ்வளவு அருவருப்பான செயலை செய்துவிட்டீர். குறைகளை தேடித் திரிவதை அல்லாஹ் தடுத்திருக்க, என் அனுமதியின்றி உள்ளே வந்து விட்டீர்கள். உமர் ரளி உண்மையே கூறினீர் என்று சொல்லிவிட்டு, கிளம்பி உமர் நஷ்டவாளி இந்த வயோதிகர் மறைமுகமாக செய்த தவறை நான் பார்த்து விட்டதால் இனி பகிரங்கமாக செய்வாரே! வருத்தப்பட்டார்கள். வயோதிகரும் உமர் ரளி சபைக்கு வரவில்லை. சில நாட்கள் கழித்து ஒழிந்து ஒழிந்து வந்து அமர்ந்தார். உமர் ரளி பார்த்து அழைக்கிறார்கள். அவர் பயந்து அருகில் வருகிறார், உமர் ரளி அவரின் காதில் அருகில் சென்று நான் அன்று பார்த்ததை யாரிடமும் சொல்லவில்லை, மஸ்வூதிடம்கூட என்றனர்.வயோதிகர் சொன்னார் காதில் நான் நான் அன்றே அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன். (ஹயாதுஸ் ஸஹாபா217)

ஒரு பெரியவர் அவரைப்பற்றி புறம் பேசியவருக்கு அதிகமான வெகுமதிகளை அனுப்பினார்.

இமாம் ஸஅதி (ரஹ்) அல்லாஹ் மனிதனுக்கு இரண்டு கண்களை கொடுத்து, ஒரு கண்ணில் தனது குறையையும் மறுகண்ணில் மற்றவர்களின் நலவை பார்க்கவும்தான். இரண்டு கண்களாலும் பிறருடைய குறையை மட்டுமே பார்த்தால் தன் குறையை பார்க்க கண்ணே இல்லையே என்றுதான் கவலைப்படுகிறேன்.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எதிர்பாராதவிதமாக யாருடைய குறையாவது நம் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வது? இல்லை அப்படி இருக்கலாம். அல்லது இப்படி இருக்கலாம் என்று 70 விதமான காரணங்களை கற்பனை செய்து அவனை நிரபராதி ஆக்க முயல வேண்டும். அதன் பிறகும் உன் மனம் அவன் குற்றவாளி என வாதாடினால், 70 காரணங்களையும் ஏற்கமுன்வராத நீ எவ்வளவு கொடியவன் என்று தன்னை தானே பழித்துக்கொள்ளவும்.

நபி (ஸல்) கஃபாவை பார்த்து மகிழ்ச்சியால் கஃபாவே நீ எத்துனை பரிசுத்தமாக இருக்கிறாய்! உனது நறுமனம் எவ்வளவு உயர்ந்தது. மரியாதைக்குரியதாய் இருக்கிறாய். ஆனால் முஃமினுடைய கண்ணியம், மரியாதை உன்னை விட மகத்தானது. அல்லாஹ் உன்னை மரியாதைக்குரியதாய் ஆக்கியுள்ளான். அதுபோல் முஃமினுடைய, பொருள், இரத்தம், மானம் மரியாதைக்குரியதாய் ஆக்கியுள்ளான். ஒரு முஃமின் மீது தீய எண்ணம் கொள்வதை விளக்கியுள்ளான். (தப்ரானி)

மிகத் தீய வட்டி தன் முஸ்லிம் சகோதரனை மானபங்கப்படுத்துவது. (தப்ரானி)
ஒரு முஸ்லிம் சகோரரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும் வகையில், அவர் இல்லாதபோது பேசப்படுவதை எவர் தடுப்பாரோ, அவரை நரகில் இருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் கடமையாகிவிட்டது.  (அஹ்மத், தப்ரானி)

நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது இவர்கள் இருவரும் வேதனைசெய்யப்படுகிறார்கள்.புஹாரி.
- நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார்என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்என்று விளக்கமளித்தார்கள்.அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப்பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளைஉயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையைசர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர்நரகத்தில் போய் விழுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.     நூல் : புகாரி (6478)
நான் நபி (ஸல்) அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (நூல்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

 மனிதர்களை மட்டுமின்றி உண்ணும் உணவைக் கூடக் குறை கூறுதல் கூடாது.
""நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள்; பிடிக்காவிடில் (உண்ணாமல்) அமைதி காப்பார்கள்'' என அபுஹீனரா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்).
எவர் தன் (முஸ்லிம்) சகோதரரின், பாவமீட்சி பெற்று (தஃபா)செய்துவிட்ட குற்றத்தைப் பற்றிக் குறை கூறுகிறாரோ, அவர் அந்த பாவத்தில் சிக்காதவரை மரணம் அடைய மாட்டார். (திர்மிதி)

புறம் பேசப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை பெற்றுக்கொள்ளவில்லையானால்...
 قال رسول الله صلى الله عليه وسلم: ان كفارة الغيبة أن تستغفر لمن اغتبته تقول : اللهم اغفرلنا وله (مشكوة)

சில இடங்களில் புறம் பேசலாம்
عن فاطمة بنت قيس اتيت النبي صلى الله عليه وسلم فقلت ان اباالجهم ومعاوية خطبانى فقال رسول الله أمّا معاوية فصعلوك وَاَمَّا ابوجهم فلا يضع العصا عن عاتقه
பாத்திமா பின் கைஸ ரளி வந்து ஸல் அவர்களிடம் என்னை முஆவியா ரளி அபு ஜஹ்ம் ரளி இரண்டு பேரும் பெண் கேட்கிறார்கள். யாரை தேர்ந்தெடுப்பது. ஸல் சொன்னார். அபு ஜஹ்ம் வறிய நிலையில் உள்ளார். முஆவியா தன் ஆயுதத்தை தோல் பட்டையை விட்டும் கீழே இறக்காதவர் என்றனர். நூல்: முஸ்லிம் 295

ஸல் அவர்களிடம் ஹிந்தா (ரளி) அவர்கள் வந்து எனது கணவர் கஞ்சதனம் கொண்டவர் செலவுக்கு சரியாக பணம் கொடுப்பதில்லை என்றனர். ஸல் அவர்கள் உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்ளவும் என்றனர்.

1. ஒருவர் வெளிப்படையாக ஹராமானவற்றைச் செய்யும்போது (உதா. சிகரட்,மதுவிற்கு பழக்கப்பட்டவர், வட்டிவாங்குபவர்,)
2. நாம் சொல்வது கேட்பவரை (அதாவது இரண்டாம் நபரை) ஏதேனும் இழப்பிலிருந்து பாதுகாக்கும் என உறுதியாக தெரிந்தால். மாப்பிள்ளையை பற்றியோ, வியாபாரத்தில் இணையும் பார்ட்னரைப்பற்றியோ நம்மிடம் விசாரிக்கப்பட்டால் உறுதியாக தெரிந்ததை மட்டும் சொல்லவும்.
3. மருத்துவத்திற்கு அவரது குறைகளைச் சொல்லியே ஆகவேண்டிய நிலையில்.
4.
இப்படி நாம் சொன்னால் குறிப்பிட்ட நபர் தன்னை திருத்திக் கொள்ள வாய்ப்பிருக்கும்போது. (உதா. அதிகமாகக் கோபப்படுபவர்)
5. ஒருவரிடம் நமக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாகத் தெரிந்தால் அவரிடம் நமக்கு அநீதி இழைத்தவர் செய்த அநியாயங்களை விவரித்தல் 
6) தகுதியில்லாதவராக இருந்தால் பழி உணர்வு இல்லாமல் நன்னோக்கத்தில் மேல் அதிகாரியிடம் முறையிடலாம்.
8) உரிமைகள் பறிக்கப்பட்டவர்,
7) (ஸல்) பெரும்;பாவியைக்குறித்தும் புறம் பேசுவது குற்றமாகாகது. தான் மறைவாக செய்கின்ற பாவத்தை குறித்து பேசுபவனையும் குறித்து புறம்பேசுவது குற்றமாகாது. (அபூ ஹூரைரா(ரளி))
ويل لكل همزة لمزة * الذي جمع مالا وعدَّده
அவன் பொருளை சேகரித்து அதனை எண்ணி வைத்தான்.
நல்ல காரியங்களுக்கு செய்ய வேணும் என்று அவன் சேர்க்கவில்லை. திரட்டி வைத்திருக்கனும் என்பதற்காகவே சேர்கிறான். அதன் மீது பேராசை, இது பாவத்திற்கு ஆணிவேர்! கடமைகளை சரியாக செய்யாமல், நல்ல காரியங்களுக்கு செலவு செய்யாமல் சேர்த்து வைத்துக்கொள்வான். கேட்டால் சமயத்துக்கு உதவும் என்பான்.
يحسب ان ماله اخلده
நிச்சயமாக தன்னுடைய பொருள் தன்னை நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் எண்ணுகிறான்.
மரணத்தைவிட்டும், ஆபத்துக்களை விட்டும் நோய்களை விட்டும் தடுத்துவிடும் என...
நபி ஸல் காலத்தில் இப்படிப் பட்ட குணம் படைத்தவர்கள் நிரம்ப இருந்தார்கள்.
இவர்களில் வலீப்னு முஙைரா, அக்னஸுப்னு ஷூரைக், உமய்யதுப்னு கலப் முக்கியமானவர்கள்.
كلا لينذ ن فى الحطمة وما ادرك ماالحطمة نار الله الموقدة
حطمة என்றால் முறிக்கக் கூடியது, அதில் போட்டால் உடலை முறித்து விடும்.
வெளியிலிருந்து எந்த காற்றும் உள் புகாது. உள்ளிருக்கும் அனலும் வெளியேறாது.
நரக நெருப்பை ஆயிரம் ஆண்டுகள் சிகக்கும் வரை, 1000 ஆண்டுகள் வெளுக்;கும் வரை 1000 ஆண்டுகள் கருக்கும் வரை எரிக்கப்படும். (திர்மிதி)
التى تطّلع على الأفئدة انها عليهم مؤصدة فى عمد ممددة
இமாம் குர்துபீ: இதயத்தை மட்டும் இறைவன் சொன்னது, இதயத்துக்கு கடுமையான வேதனை வந்து விட்டால் அதற்கு சொந்தக்காரன் மரணித்து விடுவான், அந்த அடிப்படையில் நரகவாசிகளின் இதயம் தாக்கப்படும்போது அவர்கள் மரணித்தவர்களைப் போன்று ஆகிவிடுவார்கள். ஆனால் மரணமடைமாட்டார்கள்.
இறைவன் திருமறையில் ''அவர்கள் மரணமடையவும் மாட்டார்கள் உயிராக இருக்கவும் மாட்டார்கள். என்கிறான்.
மஃரூபுல்கர்கி எனும் இறைநேசர் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அதில் சில வாலிபர்கள் இசை கருவிகளை வைத்து இசைத்துக்கொண்டும்,பாட்டு பாடிக்கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்து கோபமுற்ற ம்ஃரூப் (ரஹ்) அவர்களின் தோழர்கள்,இந்த பாவிகளுக்காக பத்துஆ செய்யுங்கள் என்றனர்.
அப்போது யாஅல்லாஹ்.உலகில் இவர்களை நீ சந்தோஷமாக வைத்ததுபோல் மறுமையிலும் சந்தோஷப்படுத்துவாயாக!என்று துஆச்செய்தார்க

No comments:

Post a Comment

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}