Tuesday, May 28, 2013

இதய நோய்க்கு நிவாரணம்

இதய நோய்க்கு நிவாரணம் 
மாமேதை ஹஸன் பஸரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். நான் வாலிபர் ஒருவருடன் பஸரா நகர வீதியொன்றில் சென்றுக் கொண்டிருந்தேன். வழியில் மருத்துவர் ஒருவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்க ஆண்களும்,, பெண்களும், ,, சிறுவர்களும் அவரைச் சுற்றிலும் நின்றுக் கொண்டு தத்தம் நோய்களைப் பற்றி அவரிடம் கூறி மருந்துக்களை வாங்கிக் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது என்னுடன் வந்த வாலிபர் அம்மருத்துவரிடம் சென்று மருத்துவரே! பாவங்களை கழுவி சுத்தப்படுத்தி இதய நோய்க்கு நிவாரணம் அளிக்கும் மருத்துவம் தங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.

ஆம். எமக்கு தெரியும் என்று கூறிய அவர், என்னிடமிருந்து பத்து பொருட்களை பெற்றுக் கொள்வீராக! முதலில் ஏழ்மை எனும் மரத்தின் வேரையும் , பணிவு எனும் மரத்தின் வேரையும் சேர்த்து அத்துடன் பச்சாதாபம் என்னும் கடுக்காயை கலந்து பின்னர் அவற்றை இறைப் பொருத்தம் எனும் உரலில் இட்டு போதுமாக்கிக் கொள்ளுதல் எனும் உலக்கையால் அவற்றை இடித்துப் பொடியாக்கி கொள்வாயாக!

பிறகு இறைபக்தி எனும் சட்டியிலிட்டு நாணம் எனும் நீரை அதில் ஊற்றி இறைநேசம் எனும் நெருப்பின் மூலம் அதனை சூடேற்றி கொதிக்க வைப்பாயாக!

பின்னர் அதனை நன்றியெனும் கோப்பையில் ஊற்றி நல்லாதரவு எனும் விசிறியினால் அதனை வீசி ஆற வைத்து புகழ் எனும் கரண்டியினால் எடுத்து அதனை பருகிவிடுவாயாக!

இவ்வாறு நீ செய்து வந்தால் ஈருலகை சேர்ந்த எல்லா வித நோய்களும் துன்பங்களும் நீங்கப் பெற்று நல்ல நிவாரணம் கிடைத்திடும் என பதிலளித்தார்.

இவ்வாறு 

الفقر والتواضع والتوبة والتقوى والرضا والحياء والمحبة والشكر والرجاء والحمد

ஆகியவற்றைக் கடைபிடித்து அமல் செய்வதின் மூலம் பாவமென்ற நோய் நீங்கப் பெற்று சுகம் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை
tanks. mail of islam

Monday, May 27, 2013

பேராசை

بسم الله الرحمن الرحيم (1)
أَلْهَاكُمُ التَّكَاثُرُ (2) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (3) كَلَّا سَوْفَ تَعْلَمُونَ (4) ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ (5)كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ (6)
لَتَرَوُنَّ الْجَحِيمَ (7) ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ (8) ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ (9(
மக்காவில் செல்வாக்கான குரைஷி கோத்திரத்தார் இரண்டு பிரிவுகளாக 'அப்துல் முனாஃப் - ஸஹ்ம்' பிரிந்து சபைகளில் பெருமை பேசிக் கொள்வார்கள். உச்சகட்டமாக இருவரும் கப்ருகளுக்கு சென்று யார் பிரிவினர் அதிகமிருந்திருக்கிறார்கள் என்று எண்ணினார்கள். அப்பொழுது.
عن عبد الله بن الشخير رضي الله تعالى عنه انه قال اتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ الهاكم التكاثر قال  يقول ابن آدم: مالي مالي. وهل لك من مالك إلا ما أكلت فأفنيت، أو لبست فأبليت، أو تصدقت فأمضيت؟
ஒரு தடவை ஆயிஷா ரளி அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுத்து பங்கிடப்படுகிறது. நபி (ஸல்) பங்கிட்டாகி விட்டதா? என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஸா (ரளி) கொடுத்தாகி விட்டது. நமக்கு இந்த பகுதி உள்ளது என்றனர். அதற்கு நபி (ஸல்); நம்முடையது நாம் எதை பங்கிட்டு கொடுத்தோமோ அது தான்.
ஆசைப்படுவது மனித இயல்பு. மனித மனங்கள் ஆசைகளால் உயிர் பெருகின்றன. ஆசையில்லாத உள்ளங்கள் பிணவறைகளே! ஆனால், நமது ஆசைகள் எப்படிப்பட்டவை என்பது மிகமிக முக்கியமானது ஆகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஆசைகளுக்கு" அனுமதி தந்திருக்கின்றார்கள். "நீங்கள் இறைவனிடம் கேட்கும்போது மிக மிக அதிகமாகக் கேளுங்கள். ஏனெனில் கேட்கப்படுபவனே உங்களைப் படைத்தவனாக இருக்கின்றான் இறைவனிடம் அவனது அருள்வளத்தைக் கேளுங்கள்
அங்கு பஷர் பின் மூஸா அவர்களும் இருக்கின்றார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு புன்னகை பூத்த வண்ணம் தம் தோழர்களைக் கேட்கிறார்கள்; "நண்பர்களே! வாருங்கள், இனிய மாலைப்பொழுதில் ஆசைகளைப் பரிமாறிக் கொள்வோம். தோழரே! உங்கள் ஆசை என்ன?" ஒருவர் கூறுகிறார்: " எனக்கு இந்த வீடு முழுக்க தங்கக்கட்டிகளும், நகை நட்டுகளும் கிடைக்கணும். அதை நான் இறைவழியில் மகிழ்வுடன் செலவழிக்கணும் என்பதே எனது ஆசை"

உமர் ரளியல்லாஹு அன்ஹு மற்றவரிடம் கேட்கிறார்கள்: "உங்கள் ஆசை என்ன?"
அவர் கூறுகிறார்: "எனக்கு இந்த வீடு முழுக்க முத்துமணிகள், பவளங்கள், ரத்தினங்கள், வைரங்கள் நிரம்பி வழிய வேண்டும்
அதனை நான் மகிழ்வுடன் இறைவழியில் செலவழிக்க வேண்டும் என்பதே என் ஆசை"
உமர் ரளியல்லாஹு அன்ஹு மீண்டும்: "இன்னும் எவராவது?
நண்பர்கள் கூறினார்கள்: "நம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களுக்கு எதை ஆசிப்படணும் என்பதே தெரியவில்லை
உமர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: "எனக்கு இந்த வீடு நிறைய அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற சத்திய சீலர்கள் வேண்டும்.

62:10. பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

அய்யூப் அலை அவர்கள் தனிமையில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது தங்கத்தாலான வெட்டுக்கிளிகளை அவர்கள் மேனியில் உதிர்ந்த்தான். உடனே அவர்கள் அதை பிறக்க ஆரம்பித்தார்கள். அய்யூபே அவசரமாக பொறுக்கும் அளவு உம்மை ஏழையாக வைத்திருக்க வில்லையே என்றான் அல்லாஹ். '' லா கினாஅன் பரகதிக' ( யா அல்லாஹ் என்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறாய். உண்மைதான். ஆனால் உனது பரக்கத் கிடைக்கும் போது நான் எப்படி பாராமுகமாக இருக்க முடியும்) என்று பதில் அளித்தார்கள். (புகாரி)
எப்போது அது பேராசையாக மாறுகிறதோ அப்போது அது அவனை எந்த நிலைக்கும்...
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் சூழ்ந்துள்ளஅல்லது சூழ்ந்து கொண்டுவிட்டவாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பி விட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பி விட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.. -Gfhhp

பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் (ரலி) நூல்:திர்மிதீ

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
قال النبي صلى الله عليه وسلم يكبر ابن آدم ويكبر معه اثنان حب المال وطول العمر
قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لو كان لابن ‏ ‏آدم ‏ ‏واديان من ذهب لأحب أن يكون له ثالث ولا يملأ فاه إلا التراب ويتوب الله على من تاب
قال النبي صلى الله عليه وسلم :لا يزال قلب الكبير شاب فى اثنتين فى حب الدنيا وطول العمر
இறைத்தூதர்http://www.readislam.net/sall.gif அவர்களிடம் நான் (நிதயுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே! இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். கொடையுள்ளத்துடன் இதை(க்கொடுப்பவர் கொடுக்க, தானும்) பேராசையின்றி எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படும். பேராசயுடன் இதை எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை தான் (வாங்கும்) தாழ்ந்த கையை விட மேலானதாகும்" என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக! தங்களுக்குப் பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற மாட்டேன்" என்று கூறினேன். அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) , நூல்:புகாரி
உமர்(ரலி) அறிவித்தார்.
      
நபி(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)" என்றார்கள். நூல்: புகாரி
அவா என்னும் பேராசை உடையவர், தாம் மட்டுமே தமக்கு மட்டுமே என்ற தன்னலத்தால் பிறர்க்கு உரியதையும் பறித்துக் கொண்டு அவர்க்குக் கெடுதல் செய்து விடுவார்.
நடுத்தக் குடும்பங்களிலும், செல்வ வளமிக்க குடும்பங்களிலும்தான் ”

பொருட்களை வாங்கிக் குவிப்பதின் பின்னணியில் தங்களின் ”மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்பதைக் காட்டிலும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் முன்பு தாங்கள் ”வளமிக்கவர்கள்” என்று காட்டுகிற மனப்பாங்கே உள்ளது. அதில்தான் அந்தஸ்து அடங்கியுள்ளது என  நினைக்கிறார்கள். எதிர் பாலியலை கவர்வதற்கும் மயக்குவதற்குமாக பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். 

சுற்றத்தினருக்கு இணையாக வாழ வேண்டும். தங்களின் சுற்றத்தார் படிக்க வைக்கிற பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். இதை நிறைவேற்ற விடுமுறை நாட்களில் கூட பணிபுரிகிறார்கள். ஓய்வு பெறும் நாள் வரை ஓயாது ஓடுகிறார்கள். ஒருவர் ஓடுவதைப் பார்த்து அடுத்தவர் ஓடுகிற சமூகமாகத்தான் நுகர்வு மனநிலை இவர்களை மாற்றியுள்ளது

ஜும்மா அன்று கூட கடை அடைக்காமல்...
பெரும்பாலும் பைனான்ஸ் கம்பேனிகள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி
மக்களின் பேராசையை வைத்து வித விதமான பேர்களில் மோசடி
பேராசைகளினால் மனிதர்கள் படும்பாடு... பணத்திற்காக மற்ற எல்லா சுகத்தையும் இழக்கவும் தயார் உடல் நலத்தையும் இழக்கிறார்கள்.

 முல்லா கதை ஒன்னு...

முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையை திருப்பி தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையை திருப்பி கேட்டார். அதற்கு முல்லா "அடடே..., உங்களிடம் வாங்கிய பானையை திருப்பி கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது. அந்த பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, "என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிசென்றார்.அதேபோல் சில நாட்களுக்கு பின் முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் "முன்பு கொடுத்ததை விட பெரிய பானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றை கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் முல்லா பானையை திருப்பி தரவில்லை. பின் தயங்கி தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையை திருப்பி கேட்டார். " அத ஏன் கேக்கறீக அந்த பானை நேற்றுதான் செத்து போச்சு" என்றார் முல்லா. கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் "என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படி செத்து போகும் " என்று கோபமுற்றார். அதற்கு முல்லா " பானை குட்டி போட்டதை நம்பு பொழுது ஏன் செத்து போனதை நம்பமுடியாது? " என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்....
சிலபேர் அளவோடு சாப்பிடாமல் சாப்பாட்டில் பேராசைபட்டு பிரியாணி
     'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்http://www.readislam.net/sall.gif அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
ع أنس بن مالك يقول: قال رسول الله صلى الله عليه وسلم: "يتبع الميت ثلاثةٌ، فيرجع اثنان ويبقى معه واحد: يتبعه أهله وماله وعمله، فيرجع أهله وماله، ويبقى عمله
vg;gb Nguhirapy; ,Ue;J jg;gpg;gJ
நமக்கு மேலுள்ளவர்களை பார்க்கும்போதுதான் இந்த வித வீணான ஆசை வரும் நாம் நமக்குள்ள கீழுள்ளவர்களை பார்க்க வேண்டும்.
قال النبي صلى الله عليه وسلم : اذا نظر احدكم الى من فضل عليكم بالمال والخلق فلينظر الى من هو اسفل منكم
انظروا الى من اسفل منكم ولا تنظروا الى من هو فوقكم فهو اجدر الا تزدروا نعمة الله   
قد أفلح من أسلَمَ ورُزقَ كفافا وقَنّعَهُ اللّهُ بما آتاهُ

அல்லாஹ்வின்அருட் கொடைகள்
இப்னு அப்பாஸ்:   அன்னயீம்' என்ற சொல்லின் கருத்து, உடல் , காதுகள், கண்கள் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதாகும். இதனைப் பற்றி நீங்கள் மறுமையில் வினவப்படுவீர்கள்' எனக் குறிப்பிடுகிறார்கள்.
இப்னு மஸ்வூத் : அன்னயீம்' உடல் ஆரோக்கியமும், பாதுகாப்பும் ஆகும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
இப்னு முஜாஹித்: உலகில் கிடைக்கும் இன்பம் தரும் அனைத்து பொருட்களும்.
அபூஹுரைரா ரளி அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் மதினாவில் அபூ பக்கர் ரளி, உமர் ரளி மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது நபி ஸல் வந்தார்கள். அபுல் ஹைதம் அல் அன்ஸாரி ரளி வீட்டிற்கு வந்தார்கள். (முஸ்லிம், திர்மிதி, அபூ தாவூத்)
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளை பற்றி விசாரிப்பான்
பேருகள் இரு வகைப்படும் 1) இம்மைப்பேறு. மனிதன் அழகாக இருத்தல் உடல் நலம், செல்வம், வீடு, மனைவி மக்கள், பிறர் போற்றக்கூடிய அளவு கண்ணியமாக வாழ்தல்
2) மறுமைக்காக சம்பாதித்தல்,

 நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஆயுளின் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று, ‘இன்றைய இந்த இரவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் துவக்கத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்கமாட்டார்கள்என்று கூறினார்கள்” . புஹாரி : 116 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி).

Tuesday, May 14, 2013

வெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை? தவிர்க்க வேண்டியவை?
வெயிலை சமாளிக்க அருந்த வேண்டியவை? தவிர்க்க வேண்டியவை?
அக்னி நட்சத்திரம் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகப் போகிறது. அந்த வெயிலின் உக்கிரத்தைத் தணிக்க எதை அருந்தலாம்? எதை தவிர்க்கணும் என்பது பற்றிய சிறிய குறிப்புகள்.
தயிர் சூடு ஆனால் மோர் குளிர்ச்சி, மாம்பழம் சூடு ஆனால் மாம்பழ மில்க் சேக் குளிர்ச்சி, பப்பாளியும் பாலாவும் வெயில் நேரத்தில் வேண்டவே வேண்டாம். எக்கச்சக்க சூடு….'
உணவு விடயத்தில் தமக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் சேர்த்துக் குழப்பி இப்படி சில தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் எப்போதும் உலவுவதுண்டு. யாரோ ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளாமல் போனதால் குறிப்பிட்ட அந்த உணவு,எல்லாருக்கும் பிரச்னை தருவதில்லை.
பொதுவாக வெயிலின் உக்கிரத்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து வறண்டு கொண்டே இருக்கும். அதை சரிசெய்ய இழந்த நீர்ச்சத்தை உடலுக்குத் திருப்பித் தர வேண்டும். நீர்ச்சத்து என்றதும், ஜூஸ்தான் குடிக்க வேண்டும் என்பது பலரது அபிப்ராயம். ஜூஸ் என்றில்லாமல், எல்லா திரவ உணவுகளும் ஓ.கே.
நிறைய நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் முடிந்த போதெல்லாம், ஞாபகம் வரும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.
உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிற போது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம்,தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.
பழங்களை அப்படியே சாப்பிடுவது பெஸ்ட்! ஜூஸாக எடுக்கும்போது, அவற்றிலுள்ள நார்ச்சத்து பறிபோவதுடன், சுவைக்கு சர்க்கரை வேறு சேர்த்துக் கொள்கிறோம்.
'சான்ஸே இல்லை ஜூஸாக தான் குடிப்பேன்' என அடம் பிடிக்கிறவர்கள், பழத்தின் கசப்பான தோல் பகுதியையும்,விதைகளையும் நீக்கிவிட்டு, சர்க்கரை சேர்க்காமல், அப்படியே மிக்சியில் அடித்து கெட்டியாகக் குடிக்கலாம்.
நீர்மோர் தாகத்துக்கு மிக நல்லது. கூடுதல் சுவைக்கு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்துக் குடிக்கலாம்.
பால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு, அதே பாலை லேசாகக் குளிர வைத்து, அதை ரோஸ் மில்க்காகவோ, பாதாம் மில்க்காகவோ மாற்றிக் கொடுக்கலாம்.
அப்படிக் குளிர்ச்சியாகக் கொடுக்கும் போது, அதை ஒரே மடக்கில், தொண்டைக்குள் விழுங்காமல், சிறிது நேரம் நாக்கிலேயே வைத்திருந்து, மெல்ல விழுங்கினால், தொண்டை மக்கர் பண்ணாது. வயதானவர்கள், வெயில் காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பலருக்கும் இந்த கோடை வெயிலால் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும்.
மேலும் கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.
வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால் உடலுக்கு இதம் கிடைக்கும்.


body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}