Sunday, July 8, 2012

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆராய்ந்தார் முஸ்லிமானார்

 அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு........

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற ( டாக்டர் ஜாரி மில்லர் ) - By EAGLE EYE

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது. குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)

என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது. இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை. உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது. டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்

இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)

1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்என்கிறது இக்கொள்கை

‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்

“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல;அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)

என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!” (16:98) என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை

ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது... 


Friday, July 6, 2012

சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்)



அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகு தமிழில்:  கிப்லா ஹள்ரத், திருச்சி.
பொறாமைக்கு ஏற்பட்ட “முடிவு”

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மிஸ்ரில் இருந்து கிதாபு கோவை செய்தார்கள். திருக்குர்ஆனுக்கும் ஹதீதிற்கும் விளக்கவுரை (தஃப்ஸீர்) எழுதினார்கள். அன்னவர்களின் அருஞ் சேவைகளைக் கண்டு பொறாமை கொண்ட சில சீதேவிகள்மன்னரிடம் சென்று இல்லாததையும் பொல்லாததையும் கூறி “வத்தி” வைத்து விட்டனர்.  உண்மை என்ன?என்பதனைத் தீர ஆராயாமல் மன்னரும் சொல்வார் பேச்சைக் கேட்டுக் கொண்டுஇமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களையும் குறைஷிக் குடும்பத்தார் சிலரையும் தம் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறி விடும்படி உத்திரவிட்டார்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தாங்கள் எக்குழப்பத்தையும் செய்யவில்லை என எவ்வளவோ எடுத்துரைத்தும் மன்னர் செவி சாய்க்கவில்லை! தனது “முடிவில்” பிடிவாதமாகவிருந்தார்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மன்னரின் “முடிவை” ஏற்று நாட்டை விட்டு வெளியேறிட தங்களுக்கு  மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என்றார்கள்.  மன்னரும் பெருந்தன்மையோடு (?) ஒப்புக் கொண்டார்.  சரியாக மூன்றாவது நாள்
பகலில் மன்னர் திடீரென தனது ”முடிவை” அடைந்தார். ஆம்! அவர் இறந்து விட்டார்!
எனவேஇமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தொடர்ந்து மிஸ்ரிலியே இருந்து சமுதாய அறப்பணிகளைச் சிறப்பாக செய்தார்கள்.  பொறாமைக் காரர்களையும் திருத்தி நல் வழிப் படுத்தினார்கள்! (அல் ஹம்து லில்லாஹ்).
மதி நுட்பமும் - அதி நுட்பமும்!

ஒருமுறை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போதுகிளி வியாபாரி ஒருவர் தனக்கு ஒரு தீர்ப்பு (ஃபத்வா) தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்!|
என்ன விஷ­யம்என இமாம் மாலிக் (ரஹ்) கேட்டார்கள்.  அதற்கவர்நான் ஒரு வியாபாரி.  கிளிகளைப் பிடித்து அவற்றைப் பேசிப் பழக்கி சந்தையில் விற்று வருகிறேன். பலரும் என்னிடம் வாங்கிச் செல்வர்.  நேற்று வந்த சகோதரர் ஒருவர்கிளி எப்போதும் பேசுமா?என்றார்.  நான் வழக்கம் போல் ஆமாம்! என்றேன்.  அவரும் பணம் கொடுத்து வாங்கிச் சென்றார்.  இன்று அவரே திரும்பி வந்து கிளி ”எப்பொழுதும்” பேசவில்லைஎனவேகிளியைத் திரும்பப் பெற்றுக் கொண்டு பணத்தைக் கொடு என்று வற்புறுத்தினார்.  நானோகிளி எப்பொழுதும் பேசாவிட்டால் எனது மனைவி “தலாக்” என்று கூறி விட்டேன். மீண்டும் அவர் கிளி “எப்பொழுதும்” பேசவில்லை என்கிறார்! அப்படியானால்எனது மனைவி தலாக் ஆகிவிடுவாளாஎன்று கேட்டார்!
சற்று யோசித்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்கிளி எப்பொழுதும் பேசாததால் உனது மனைவி தலாக் ஆகி விடுவாள் என்று கூறியனுப்பி விட்டார்கள்! வியாபாரியும் கவலை தோய்ந்த முகத்தேடு புறப்பட்டுப் போனார்!
இவ்வளவையும் வகுப்பில் அமர்ந்து அவதானித்துக் கொண்டிருந்த 14 வயதான இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்தமது ஆசிரியரிடம் அனுமதி பெற்று வெளிச் சென்றார்கள்.
கவலையுடன் சென்று கொண்டிந்த கிளி வியாபாரியிடம் சென்றுஉமது கிளி அதிக நேரம் பேசுமாகுறைந்த நேரம் பேசுமாஎன்று கேட்டார்கள்.
அதற்கவர் அதிக நேரம் பேசும் என்றார்.  அப்படியானால் உனது மனைவி தலாக் ஆக மாட்டார்... என்று கூறிவிட்டு வகுப்பறைக்குத்  திரும்பிவிட்டார்கள் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்.
மீண்டும் கிளி வியாபாரிஇமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் வந்தார்.  என்ன வி­ஷயம் என்றார்கள் இமாம்!  எனது மனைவி தலாக் ஆகிவிடுவாள் என்று நீங்கள் கூறினீர்கள்தலாக் ஆகமாட்டாள் என உங்கள் மாணவரே கூறுகிறார் என்றார் கிளி வியாபாரி.  அவர் யார்என இமாம் மாலிக் (ரஹ்) கேட்டார்கள்.  நான் தான் என இமாம் ஷாபிஈ (ரஹ்) எழுந்தார்கள்.  அவர் மனைவி தலாக்காக
மாட்டார் என எந்த அடிப்படையில் கூறினீர்கள்என்றார்கள்.  அதற்கு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்அதாவது: கைஸ் என்பாரின் மகள் ஃபாத்திமாரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ்! அபூஜஹ்மு என்னும் நபித் தோழரும் மஆவியா என்னும் நபித் தோழரும் என்னைப் பெண் பேசி மணமுடிக்க விரும்புகிறார்கள்! நான் யாரைத் திருமணஞ் செய்து கொள்ளலாம்எனக் கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள்மஆவியா (பரமாத்தக்காரர்) சாந்தமானவர் தான். அபூஜஹ்மு என்பவர்எப்போதும் தண்டாயுதத்தை தோளில் வைத்திருப்பாரே அவர் தானே என்றார்கள்.
அதாவதுஎப்போதும் தண்டாயுதத்தை தோளில் தொங்க விட்டிருப்பாரே எனும் ரசூல் (ஸல்) அவர்களின் அமுதக் கூற்று மிகுதமான நேரத்தைத்தான் குறிக்குமே யல்லாது எப்போதும் என்று பொருளாகாது!
அதுபோல்தான் கிளி எப்பொழுதும் பேசும் என்றால் மிகுதமான நேரம் என்றுதான் கருத்திற் கொள்ள வேண்டும்!  24 மணி நேரமும் கிளி எப்படிப் பேசிக் கொண்டிருக்க வியலும்என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் பதிலளித்ததும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் , தங்கள் மாணவரின் அதி நுட்ப அறிவை மெச்சினார்கள்! வாழ்த்தினார்கள்!
பின்னர் கிளி வியாபாரியிடம் உனது மனைவி தலாக் ஆக மாட்டாள் எனப் பட்டவர்த்தனமாகத் தீர்ப்பு வழங்கினார்கள்! 

(இன்ஷா அல்லாஹ் சங்கைமிகு இமாம் அவர்களைச் சந்திப்போம்! சிந்திப்போம்!) 
website: http://emsabai.com

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}