Saturday, December 15, 2012

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும் போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.
ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும்.
கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.
அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அ‌ப்படி செ‌ய்யு‌ம் போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம். மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.
அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.
புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது.
எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சி தான். அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதை விட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.
ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்

பின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை

வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அமித் கெஃபன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில் தெரியவந்த தகவல்கள்: ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும்போது, ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது. ஒரே இடத்தில் அமரும் போது அழுத்தம் கொடுக்கப்படும் இடங்களில் உள்ள இத்தகைய செல்கள் விரைவாக அதிகரிக்கும். இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும். இது ‘மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோட்ஸ்’ எனப்படுகிறது. ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும். உடலின் மற்ற பகுதிகளைவிட ‘சீட்’ பகுதியில் கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும். இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை போடும் இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். அது மட்டுமின்றி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி எழுந்து நடக்கவேண்டும்

Thursday, December 13, 2012

அதிக வேலைப் பளுவினால் இளைஞர்கள் இதயநோய்க்கு ஆளாகும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை

மாரடைப்பு என்பது வயதானவர்களுக்குத்தான் வரும் என்ற காலம் மாறி இன்றைக்கு இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்குக் காரணம் பணிச்சுமையினால்தான் இதயநோய்க்கு ஆளாகின்றனர் இளைஞர்கள் என்கின்றது சமீபத்திய ஆய்வு. இது தொடர்பாக ஐரோப்பாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 200000 பேர் பங்கேற்றனர். அவர்களில் 23 சதவிகிதம் பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதற்குக் காரணம் அவர்களுக்கு உள்ள பணிச்சுமைதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்
வீட்டைவிட்டு வெளியே போனால் ஆண்களுக்கு கவலைப்பட என்ன இருக்கிறது என்று கூறுபவர்கள்தான் அதிகம். ஆனால் பணிபுரியும் இடங்களில் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும் அதுவே பிரதான காரணம் என்றும் சொல்கிறது இந்த ஆய்வு முடிவு.

பள்ளியில் தொடங்கும் ஓட்டம் வளர்ந்து பெரியவர்களாகி வேலையில் சேர்ந்த பின்னரும் அவர்களுக்கு தொடர்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் இரவில் அதிகம் கண்விழிக்கின்றனர். அதிகாலையில் பிறர் விழிக்கிற நேரம் தூங்குவதும், கண்ட நேரத்தில் சாப்பிடுவதும் உடற்பயிற்சியே செய்யாமல் புது வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். இதுவே அவர்களின் உடல் நலனை பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.

இது தவிர காதல் தோல்வியோ, கல்யாண முறிவோ... பெண்களைவிட, ஆண்களைத்தான் இப்ப அதிகம் பாதிக்குது. ஒருவனுக்கு ஒருத்தி'ங்கிற கொள்கை இப்ப இல்லை. தன் மனைவிக்கு வேற ஆண்களோட தொடர்பு இருக்கிறதை சகிச்சுக்க முடியாமலும் மன அழுத்தத்துல புழுங்கறாங்க. இப்படி வேலை, வீடுன்னு திரும்பின பக்கமெல்லாம் டென்ஷன், எந்தப் பிரச்னையை எப்படி அணுகறதுங்கிற தெளிவின்மை, பகிர்ந்துக்க ஆளில்லாம மனசுக்குள்ளயே போட்டுப் புதைச்சுக்கிறது, சரியான சாப்பாடு இல்லாததுன்னு எல்லாம் சேர்ந்துதான் 30 களில் இதயநோய் ஏற்பட காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

இதயநோயை தவிர்க்கலாம்
மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்கக் கூடாது. தன் மனதை புரிந்தவர்களிடம் மனம் விட்டு பேசலாம். பணத்தின் பின்னால் ஒடுவதால்தான் மனஅழுத்தத்தில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. எனவே சக்திக்குத் தகுந்த வேலையை மட்டுமே செய்யுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி செய்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்க
நன்றி-seithi.com  

Wednesday, December 12, 2012

குர்ஆன் பற்றிய வினாடி - வினா


குர்ஆன் பற்றிய குயிஸ்

1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது?
    ப : 40 வயதில்
2.  முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம்) எது?
     ப: இக்ர..; பிஸ்மி ரப்பிகல்லதீ (சூரா அலக்)
3. திருக்குர்ஆனுக்கு முந்திய வேதங்கள் எத்தனை?
     ப: 1.தவ்ராத் 2. ஸபூர் 3.இன்ஜீல்
4. திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
     ப: ரமளான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் இரவில்.
5. கடைசியாக இறங்கிய சூரா எது
     ப: சூரா நஸ்ரு.
5. ஜாமிஉல் குர்;ஆன் (குர்ஆனை ஒன்று சேர்த்து முடித்தவர்) என்ற சிறப்பு பெயர் யாருக்கு கூறப்படும்?
     ப: உஸ்மான் (ரளி) அவர்களுக்கு.
7. திருக்குர்ஆன் முதலில் எங்கு அருளப்பட்டது?
     ப: மக்கா நகரில் ஹீரா மலைக்குகையில்.
8. தமிழ் மொழியில் முதன் முதலில் தர்ஜுமா வெளியிட்டது யார்?
ப: அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஹழ்ரத்.
9. திருக்குர்ஆனில் தலைசிறந்த அத்தியாயம் எது?
     ப: சூரா ..;பாத்திஹா.
10. திருக்குர்ஆனில் தலைசிறந்த ஆயத்(வசனம்) எது?
      ப: ஆயத்துல் குர்ஸீ
11. 'திருக்குர்ஆனின் இதயம்' எந்த அத்தியாம்?
       ப: சூரா யாஸீன் என்ற அத்தியாயம்.
12. வறுமை ஏற்படாதிருக்க இரவில் எந்த சூராவை ஓதிவரும்படி நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்?                               
       ப: சூரா வாகிஆ
13. திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்கள் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
       ப: 25 நபிமார்கள்
14. திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
     ப: 5 இடங்களில் (4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது என்றும் கூறப்பட்டுள்ளது)
15. திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபித்தோழர் பெயர் என்ன? ப: ஸைத் இப்னு ஹாரிஸா (ரளி)
16. ஒரு பெண்ணின் பெயரைக்கொண்ட சூரா எது?
        ப: சூரா மர்யம் (எண்:19)
17. திருக்குர்ஆனில் எத்தனை மன்ஜில்கள் உள்ளன?
       ப:7 மன்ஜில்கள் உள்ளன.
18. திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய சூரா எது? மிகச் சிறிய சூரா எது?
    ப: பெரிய சூரா அல்பகரா -எண்.2   சிறியது சூராத்துல் கவ்ஸர் எண்.2
19. திருக்குர்ஆனை ஒளுவின்றி தொடலாமா? ஓதலாமா?
     ப: ஒளுவின்றி தொடக்கூடாது. ஒளுவின்றி ஓதுவது கூடும்.
20. குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் பெண்கள், பிள்ளைப்பேறு தொடக்கு உள்ள பெண்கள் குர்ஆனை ஓதலாமா? தொடலாமா?
      ப: ஓதுவதும் கூடாது. தொடுவதும் கூடாது ஹராமாகும்.
21. திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்யலாமா?
    ப: அல்லாஹ்வை தவிர வேறு யார் மீதும் சத்தியம் செய்வது கூடாது.
22. முதல் சூரா எது? கடைசி சூரா எது
       ப: முதல் சூரா ..;பாத்திஹா, கடைசி சூரா நாஸ்
23. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீமில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
       ப: 19 எழுத்துக்கள்
24. பிஸ்மில்லாஹ் இல்லாத சூரா எது
       ப: சூரா தவ்பா
25. குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?
      ப: 114
26. திருக்குர்ஆனின் ஆயத்துக்கள் எத்தனை? ப: (ஆயிஷா (ரளி) அவர்களின் கருத்துப்படி)
ப: 6666

Sunday, December 9, 2012

பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்







நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா!!!
பார்வை கோளாறு
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.
மூட்டு வலி
இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.
குடல் கோளாறு
பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
பற் சொத்தை
நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது
நன்றி :tamilspy  

Sunday, November 11, 2012

வாங்கஆலோசனைசெய்யலாம்!




வாங்கஆலோசனைசெய்யலாம்!
ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவரிடம் கலந்துரையாடுவதுபொதுவாக எளிதானதாக தோன்றினாலும்நடைமுறையில் அது பலருக்கும் மிக கடினமான ஒன்றாகவே இருக்கிறது.
மனிதன் அறிவில் குறைந்தவன். எல்லா நேரமும் ஒரே மாதிரியான சிந்தனை பயன் தராது. எப்போதும் அறிவாக பேசிக்கொண்டு இருப்பான். அவனே சில நேரத்தில் சின்ன விஷயத்தில் கூட கோட்டை விட்டுவிவான். எனவே தான் நாம் எந்த காரியம் செய்ய நினைத்தாலும் அதிலும் மற்றவரிடம் ஆலோசனை பெற்று செய்யப் பழக வேண்டும்.
எக்காரியமாக இருந்தாலும்சரிஆலோசனையின் பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நியதி நேற்றின்று உருவானதல்ல. மனித அறிவினால் உருவாக்கப்பட்டதும் அல்ல. இத்தரணியையும்தரணிவாழ் மக்களையும் படைத்து நிர்வாகம் செய்கின்ற அல்லாஹ்வே எதுவாக இருந்தாலும் ஆலோசனையுடன் செயல்படுத்து என்று கற்றுத்தருவதற்காக தானும் அதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறான்.
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! அனைத்தையும் படைத்து பரிபாளிக்கக்கூடிய இறைவன்யாரிடம் போய் ஆலோசனை கேட்பதுஆலோசனைக் கேட்க வேண்டிய அவசியம்தான் என்னஆனால் ஆலோசனை கலக்கின்றான்.
எதற்காக?
நாமும் ஆலோசனை செய்து காரியமாற்றவேண்டும் என்கின்ற முக்கியமான பண்பை விளங்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக!
இறைவன் திருமறையில் இரண்டாவது அத்தியாயமான அல்-பகரா’ வின் 30 ஆவது வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்: இறைவன் இவ்வையகத்தைப் படைத்து அதில் தனது பிரதிநிதியாக மனித வர்க்கத்தை உருவாக்கி நினைத்தபோது 'நான் பூமியிலே எனது பிரதிநிதிகளைப் படைக்கப் போகின்றேன்’ என மலக்கு(வானவர்)களிடம் கூறினான். அவ்வானவர்களின் பதில் வேறொன்றாக இருந்த போதிலும்இறைவன் மலக்குகளுக்கு தெரிவித்ததிலிருந்து கலந்தாலோசிக்கும் பண்பை நமக்குக் கற்பிக்கிறான் என்பதை சிந்தித்துணர வேண்டாமா? 
       உலகில் தோன்றிய அனைவர்களின் ஞானமும் கொடுக்கப்பட்ட நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே எல்லா விஷயத்திலும் தங்களின் தோழர்களிடமும் சில நேரங்களில் தங்களின் துணைவியரிடமும் கூட ஆலோசனை பெற்றிருக்கிறார்கள். ஆலோசனையின் அவசியத்தைத்தையும் அதை தனக்கு மேலுள்ளவர்களிடம்தான் பெறவேண்டும் என்பதில்லை தனக்கு கீழுள்ளவர்களிடமும் பெறலாம் என்ற அழகான முன்மாதிரியையும் தன் வாழ்க்கையில் செய்து காட்டியுள்ளார்கள். அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
'செயல் திட்டங்களில் அவர்களிடம் கலந்தாலோசனை செய்திடுவீர்! செயலாற் முடிவெடுத்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திடுவீர்.          (அல்குர்ஆன்: 3:159)
இவ்வசனம் நாடாள்வோரும் வீட்டை நிர்வகிப்போரும் தொழில் செய்போரும் அனைத்து தரப்பினரும் ஆலோசனை பெற்றே அனைத்தையும் செயல்படுத்த வேண்டுமென்ற பொது நியதியை இத்திருவசனம் நமக்கு கற்றுத்தருகிறது.
 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் ஆலோசனை செய்வதற்கு ஏராளமான உதாரணங்களைக் காணலாம்.
பத்ருகளம் வெற்றியடைந்த கையோடு களிப்போடு அனைவரும் அமர்ந்திருக்க பிடிபட்ட கைதிகள் குறித்து தமது மூத்த தோழர்களான அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹுஉமர் ரளியல்லாஹு அன்ஹுஅப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ஆலோசனை செய்த வரலாற்றுக் குறிப்பை எவர்தான் மறக்க முடியும்?
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதமொன்று வரைகிறார்கள். அதில் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் விஷயங்களில் கலந்தாலோசித்திருக்கிறார்கள். எனவே அதையே தாங்களும் பின்பற்றுங்கள்.’ (நூல்: தப்ரானி) என்று செய்தி அனுப்புகிறார்கள்.
இதற்கு மேலும் வலுவுட்டும் ஆதார சம்பவமாக அகழ்போரை நினைவு படுத்திப் பார்க்கலாம். போர் தந்திரங்களில் அகழ் தோண்டும் பழக்கம் அரபிகளிடத்தில் இல்லாத நிலையில் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையை ஏற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல்பட்டதோடு மட்டுமல்லாது தாமே முன்னின்று அகழ் தோண்டுவதற்கு உதவி செய்து மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனை குறித்து புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்றுக் குறிப்புகள் ஆலோசனையின் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஹுதைபியா உடன்படிக்கையின்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்த முடிவில் ஸஹாபாக்கள் திருப்தி கொள்ளாதுபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியபோது உம்முல் முஃமினீனான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் சொன்ன ஆலோசனைப்படி செயல்பட்டு அதற்கு தீர்வு கண்டார்கள் என்பது பெண்களின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திருக்குர்ஆனின் அந்நிஸா அத்தியாயத்தின் 33 ஆவது வசனத்தில் குடும்பவியலைப் பற்றி பேசுகிற இறைவன் கணவனும் மனைவியும் இனிமேல் இணைந்து ஒற்றமையாக வாழ முடியாத வண்ணம் பிணக்குகள் அதிகமானால் கணவன் சார்பாக ஒரு நீதவானையும்மனைவியின் சார்பாக மற்றொரு நீதமானவரையும் கலந்தாலோசித்து இருவரும் இணைந்திருப்பதே நல்லது எனில் இருவரையும் இணைத்து வைப்பார்கள் என்று கருத்து கூறுகிறான்.
இங்கே இருவரின் சார்பாகவும் பிரதிநிதிகள் வரவேண்டும் என்பதிலிருந்தே கலந்தாலோசிப்பதின் அவசியம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஆலோசனை பெறப்படும் ஒவ்வொருவருமே தமது கருத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நப்பாசைக் கொள்வது அறிவுடமை ஆகாது என்பதையும் நினைவுகூற இந்த இடம் பொறுத்தமானதே!
சமூகப்பிரச்சனையாக இருந்தாலும் குடும்பப் பிரச்சனையாக இருந்தாலும்ஏன் ...தனிப்பட்ட சிறு சிறு விஷயங்களில்கூட இந்த யுக்தியைக் கையாண்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது கையருகில் என்று சொல்லவும் வேண்டுமோ!
இதற்கு நாம் மிகச் சிறந்த உதாரணமாக ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவத்தைக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய கட்டளைப்படி ஹுதைபிய்யா எனுமிடத்தில் குறைஷிக் காஃபிர்களுடன் சில ஒப்பந்தங்தளைச் செய்து அதில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால் அந்த வாசகங்களை வெளிப்படையாகப் படிக்கின்ற யாரும் அது முஸ்லிம்களுக்கு எதிரானது தான் என்றே கருதுவார்கள். அது போன்றே அருமை ஸஹாபாக்களுக்கும் நபி (ஸல்) அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்குச் சம்மதம் தெரிவித்தது அதிர்ச்சியாகஅமைந்துவிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி ''எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்க வில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும்அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தினால் (தம் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடம் இருந்து தாம் சந்தித்த அதிருப்தியையும் (அதனால் அவர்கள் தமக்கு கீழ்ப்படியாமல் இருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலை முடியையும் களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணியை அறுத்து விட்டுமுடி களையப்) புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்துஅவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டுதம் நாவிதரை அழைத்து தலை முடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை யாரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்துஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு சென்றனர். (நூல்: புகாரி 2731)
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாடாளுமன்னராக அரசாண்டு வருகிறார்கள். அக்காலையில் ஒரு சமூகத்தவரின் ஆடுகள் வேறொருவரின் கதிர் கொழிக்கும் வயலில் மேய்ந்து துவம்சம் செய்துவிடுகின்றன. வயலுக்குச் சொந்தக்காரர் இதுபற்றி மன்னரிடம் முறையிடுகிறார். ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆடுகளைக் கவனிக்கத் தவறிய குற்றத்திற்காக அந்த ஆடுகளை வயலுக்குச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென மன்னர் தாவூத் (அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குகிறார்கள்.
அப்போது அவ்வவையில் இருந்த இளவரசர் சுலைமான் (அலை) அவர்கள் 'தந்தையே! இந்தப் பிரச்சனையில் வேறு விதமாகத் தீர்ப்பு அளித்தால் நீதியாக இருக்குமென நான் கருதுகிறேன். மன்னர் அனுமதியளித்தால் அதைக் கூறுகிறேன் என்று கேட்டுக் கொள்கிறார்கள். தந்தையும் அனுமதியளிக்கிறார்கள்.
'ஆடுகளை வயலுக்குச்சொந்தக் காரரிடம் சிரிது காலத்துக்கு விட்டு வைக்கவேண்டும். அக்கால கட்டத்தில் அவர்கள் அந்த ஆடுகளின் பலனை ஆனுபவிக்கலாம். ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் வயலை உழுது பண்படுத்தி பயிரிட வேண்டும். கதிர் கொழிக்கும் பருவம் வந்தவுடன் விளை நிலத்தை அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்து விட்டு ஆடுகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று சுலைமான் (அலை) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
நபி தாவூத் (அலை) அவர்கள் தனது மகனின் ஆலோசனையை வரவேற்று அதன்படி தீர்ப்பு அளித்தார்கள். அல்லாஹ் இச்சம்பவத்தை திருக்குர்ஆனில் இடம்பெறச் செய்து தனக்கு கீழுள்ளவர்களிடமும் கூட ஆலோசனை பெறலாம் அதன் மூலம் கூட நாம் எதிர்பார்க்காத நல்முடிவு கிட்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறான்.
இதில் இன்னொரு நிஜமும் உள்ளது. நமக்கு கீழுள்ளவர்களிடம் ஆலோசனை பெறும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் நம்மை மதித்து நம் கருத்துக்களை கேட்கிறாரே என்று நம்மீது நல்லெண்ணம் ஏற்படும்.
இதன்மூலம் பற்பல இடையூறுகள் தவிர்க்கப்படுகின்றன. கருத்துவேற்றுமை ஏற்படாமலிருக்கின்றன. எக்காரியத்தையும் இலகுவாக சாதிக்க ஏதுவாகின்றது. இதுபோன்ற மேலும் பல நற்பயன்களும் இதில் புதையுண்டு கிடக்கின்றன.
ஒப்பந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் ஆலோசனை செய்வதற்கு ஏராளமான உதாரணங்களைக் காணலாம்.
பத்ருகளம் வெற்றியடைந்த கையோடு களிப்போடு அனைவரும் அமர்ந்திருக்க பிடிபட்ட கைதிகள் குறித்து தமது மூத்த தோழர்களான அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹுஉமர் ரளியல்லாஹு அன்ஹுஅப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ஆலோசனை செய்த வரலாற்றுக் குறிப்பை எவர்தான் மறக்க முடியும்?
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதமொன்று வரைகிறார்கள். அதில் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் விஷயங்களில் கலந்தாலோசித்திருக்கிறார்கள். எனவே அதையே தாங்களும் பின்பற்றுங்கள்.’ (நூல்: தப்ரானி) என்று செய்தி அனுப்புகிறார்கள்.
இதற்கு மேலும் வலுவுhட்டும் ஆதார சம்பவமாக அகழ்போரை நினைவு படுத்திப் பார்க்கலாம். போர் தந்திரங்களில் அகழ் தோண்டும் பழக்கம் அரபிகளிடத்தில் இல்லாத நிலையில் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையை ஏற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல்பட்டதோடு மட்டுமல்லாது தாமே முன்னின்று அகழ் தோண்டுவதற்கு உதவி செய்து மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனை குறித்து புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்றுக் குறிப்புகள் ஆலோசனையின் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஹுதைபியா உடன்படிக்கையின்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்த முடிவில் ஸஹாபாக்கள் திருப்தி கொள்ளாதுபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியபோது உம்முல் முஃமினீனான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் சொன்ன ஆலோசனைப்படி செயல்பட்டு அதற்கு தீர்வு கண்டார்கள் என்பது பெண்களின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திருக்குர்ஆனின் அந்நிஸா அத்தியாயத்தின் 33 ஆவது வசனத்தில் குடும்பவியலைப் பற்றி பேசுகிற இறைவன் கணவனும் மனைவியும் இனிமேல் இணைந்து ஒற்றமையாக வாழ முடியாத வண்ணம் பிணக்குகள் அதிகமானால் கணவன் சார்பாக ஒரு நீதவானையும்மனைவியின் சார்பாக மற்றொரு நீதமானவரையும் கலந்தாலோசித்து இருவரும் இணைந்திருப்பதே நல்லது எனில் இருவரையும் இணைத்து வைப்பார்கள் என்று கருத்து கூறுகிறான்.
இங்கே இருவரின் சார்பாகவும் பிரதிநிதிகள் வரவேண்டும் என்பதிலிருந்தே கலந்தாலோசிப்பதின் அவசியம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஆலோசனை பெறப்படும் ஒவ்வொருவருமே தமது கருத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நப்பாசைக் கொள்வது அறிவுடமை ஆகாது என்பதையும் நினைவுகூற இந்த இடம் பொறுத்தமானதே!
சமூகப்பிரச்சனையாக இருந்தாலும் குடும்பப் பிரச்சனையாக இருந்தாலும்ஏன் ...தனிப்பட்ட சிறு சிறு விஷயங்களில்கூட இந்த யுக்தியைக் கையாண்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது கையருகில் என்று சொல்லவும் வேண்டுமோ!
இதற்கு நாம் மிகச் சிறந்த உதாரணமாக ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவத்தைக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய கட்டளைப்படி ஹுதைபிய்யா எனுமிடத்தில் குறைஷிக் காஃபிர்களுடன் சில ஒப்பந்தங்தளைச் செய்து அதில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால் அந்த வாசகங்களை வெளிப்படையாகப் படிக்கின்ற யாரும் அது முஸ்லிம்களுக்கு எதிரானது தான் என்றே கருதுவார்கள். அது போன்றே அருமை ஸஹாபாக்களுக்கும் நபி (ஸல்) அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்குச் சம்மதம் தெரிவித்தது அதிர்ச்சியாகஅமைந்துவிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி ''எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்க வில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும்அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தினால் (தம் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடம் இருந்து தாம் சந்தித்த அதிருப்தியையும் (அதனால் அவர்கள் தமக்கு கீழ்ப்படியாமல் இருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலை முடியையும் களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணியை அறுத்து விட்டுமுடி களையப்) புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்துஅவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டுதம் நாவிதரை அழைத்து தலை முடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை யாரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்துஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு சென்றனர். (நூல்: புகாரி 2731)
மேலும் ஷுஐப் (அலை) அவர்கள் தன்னுடைய மகளின் ஆலோசனையை ஏற்று நபி மூஸா (அலை) அவர்களைத் தனக்கு பணியாளராக அமர்த்திக் கொள்கிறார்கள். தன்னுடைய இரண்டு மகள்களில் ஒருவரை அவருக்குத் திருமணம் செய்தும் கொடுக்கிறார்கள்.


''என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள். ''எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார் (அல்குர்ஆன் 27:26,27)

ஒரு வசதிபடைத்தவர் தன் பிறந்த நாள் அன்று மனநோயாளிகளுக்கு உணவளிக்க மனநல காப்பகம் சென்றார். உணவு பரிமாறிய பின் தன் காருக்கு வந்தார் அங்கே கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவரின் காரின் ஒரு வீலில் (சக்கரத்தில்) நான்கு போல்டுகளையும் காணவில்லை. எப்படி போக முடியும் என்று சிந்தனையில் நின்று கொண்டு இருந்தார்.
 அந்நேரத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அங்கு வந்து என்ன ஆச்சுஏன் இப்படி நிக்கிறீர்கள் என்றார். அவர் பைத்தியம் என்று  இவர் கண்டு கொள்ளவில்லை. திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்கஇவர் எரிச்சல் அடைந்து நடந்ததை சொன்னார். உடனே ''ப்பூ'' இவ்வளவு தானாஎன்று சொல்லிவிட்டுமிச்சம் மூன்று வீல் இருக்கிறது இல்லையாஓவ்வொன்றிலும் ஒரு போல்டை எடுத்து இதில் போட்டால் வீடு வரையுமோஅல்லது மெக்கானிக் செட் வரையுமோ போக முடியுமல்லவாஎன்று சொல்லி விட்டு போய்விட்டார்.
வசதிபடைத்தவருக்கு அதைவிட அதிர்ச்சி இவரிடம் இருந்து இப்படியொரு ஐடியாவா?
எனவே யாரையும் சாதாரணமாக எடைபோட வேண்டாம். நினைத்து பார்க்க முடியாத நபரிடமிருந்து கூட ஒரு ‘’குட்ஐடியா’’ கிடைக்கலாம். வாங்க ஆலோசனை செய்யலாம்!
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}